மேய்ச்சலுக்கு மாடுண்டு..புல்? ம்ம்.. ஆமாங்க உண்டு!
இந்த பதிவுக்கு மீன் முக்கியமென்று கருதவில்லை என்றாலும் பெரும் வெளிச் சித்திரத்தில் அது ஒரு அழியா பங்கு கொண்டுள்ளது..மேலே உள்ள மீன் பற்றி.. பக்கம் பற்றி நன்றாக இருக்கிறது என்று தயமிக்கிமின்றி சொல்வேன்.. நான் இதுவரையில் என் நேரத்தில் 0.2 நாள் கூட மீன் பிடித்ததில்லை.. ஆனாலும் 3 குட்டை மீன்களை வாங்கி இருப்பேன்… கேட்ட மீன்பிடி கதைகளில் மிகவும் ரசித்தது… ஒரு ஓய்வு பெற்ற வான்படை அய்யாவினுடையது.. அவர்கள் ஆற்றுக் கால்வாயில் மீன் பிடித்தார்களாம்…இரண்டு லாரிகள் வேண்டியிருந்ததாம்..சரியான கதை! இன்னொரு கதையும் உண்டு! அதை நான் சரி பார்க்கப் போவதே இல்லை, பகிரப் போவதும் இல்லை! அது அப்பிடித்தான்!ஃ!
ஐவர் செல்லும் சொகுசு படகே! கட்டுப்பாடே!
அதிசய மெது வேகத்தில் தாழ்ந்து சென்று
நடு எலும்புக்கு தோதாக சாய்ந்து கொடுக்கும்
அமரும் வடிவில் தூக்கம் பெற்றாலும் அருமை
அரட்டை அடித்து கொரித்து குளிர்பானம் தேனீர்
அருந்துவதும், வேடிக்கையை கண்கொட்டாமல்
பார்க்கும் சின்னவர்கள் கவனத்தில் நாமிருவர்
சளைக்காமல் முறைக்காமல் என்னதான் செய்வதோ?!
கூட்டுத் தொகையுடன் ஆபிசு சென்று வருவது
பெற்றோரை உற்றார் உறவு பய புள்ளைகளை
இட்டுச் சென்று கையேந்தியில் இஷ்டம் போல பொடி தோசை
அவ்வப்போது பிரன்ச் எனும் பிக்னிக் — சோலா பூரி வைட் சட்னி!
ஐசுகிரீமு சிந்தி கடுப்பேற்ற பிள்ளைக்கு வரவில்லை! செல்லமன்றோ!
இருந்தாலும் பின்னால் அமர ஏசி உள்ள வண்டிக்கு இலக்கு வேண்டி
வண்டி நன்றாகவே ஓடிக்கொண்டிருக்கிறது! என் கானப் பெட்டி!
ஒரு முறை அம்மா என்ன குளிருல்ல என்று சொன்ன மாயம்! நினைவிலிருந்து!!
ஓ! அப்போது! என்று யாரும் கேட்காதவாறு வளரும் வேட்கை!
தடவிக் கொடுக்கும் குடும்ப பேர்வழிகள் இருப்பவர்கள் போத!
காலைக் கனவு! எப்போதாவது நினைவு வருபவள் ஒருத்தி வந்தாள்!
வகுப்பு தோழி ரோஜா நிற பேனாவை நீட்ட, நான் பெற்று சொன்னேன்!
நீ எப்போதும் பேனாக்களை பரிசளிப்பவள்! அப்பிடியே இருக்கிறாய்!
என் மேல் காதல் என்று சொல்லிவிடுவாள் இப்போது என்று நான் பார்க்க!
என் மகனுக்கு கல்யாணம் வைத்திருக்கிறேன் எனும் போது?
ஐயும் மெய்யும் எச்சாகி நான் கனவிலேயே சுதாரித்து மீண்டும் _______ ! ஆகா!!
யாருக்கும் அவள் யாரென்று சொல்லப் போவதில்லை! ஊகும்!!
எல்லோரும் நானில்லை நானில்லை ஆள விடப்பா சாமி! ஓடிக்க!
பொங்கலும் அதுவுமா கிண்டறியே! என்ன சொல்லி ஆரம்பிச்சே! என்ன? உங்கோட டூ!
நான் பார்த்ததில் மிகவும் ரசித்த பெண் புது டில்லியைச் சேர்ந்தவர்… கல்லூரி முடித்து வேலையில் அமர்ந்த என்னை எங்கள் கம்பெனி வருட ஓய்வு மற்றும் பயிற்சி என்று 15 நாட்களுக்கு கோவா ( பேரக் கேட்டாலே சும்மா…) அனுப்பியது.. சென்னையிலிருந்து நாங்கள் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்னாடகா, கேரளா என்று மொத்தமான பெருங்கூட்டமாக ரயிலில் சென்றோம். மங்களூரில் ஓய்வெடுத்து உடுபியில் தாமதித்து கோவாவில் சற்று தொலைவிலிருந்த மங்கேஷிநாத் கோவிலுக்கு சென்று வந்தோம்… கதைகள் கேட்க செவியிருந்தால் நல்ல ஊர்க் காதலன்கள் காதலிகள் இருப்பார்கள்… அவர்களிடம் சிக்கிக் கொள்ளலாம்… உங்கள் கூட்டத்தில் ஒரு நல்ல மணி பார்ப்பவர் இருந்தால் போதும்.. எப்பிடியோ உங்கள் கிறுக்கிலிருந்து காப்பாற்றி பிரட் ஆம்லெட்-லாம் உங்கள் வாயில் திணித்து ஊருக்கு வாபசு செய்து உங்கள் அம்மாவிடம், உங்கள் பேராசிரியரிடம், உங்கள் பாசு-இடம் என்று மூன்று பேரிடமும் பத்திரமாக ஒப்படைத்து விடுவார்..
அந்த நன்றாக மணி பார்க்கக் கூடிய நெருங்கிய நண்பன் நான் மிகவும் ரசித்த அந்த புது டில்லி பெண் பற்றி மேலே சொன்ன மூன்று பேர்களிடம் சொல்லவில்லை! இவன் என்னை காப்பாற்றுபவன் ஆதலால், பேசினாலும், உனக்கு தெரியாது.. இதெல்லாம் அவர்கள் ரசிப்பவர்கள் தாம்… ஆனால் நீ சொன்னால் என்னமோ போ! புரோடொகால் விசயம்! ஒண்ணும் பண்ண முடியாதபடிக்கு மாட்டை விரட்டித் தான் சிங்கபூரு போகணும்… கப்பலா.. அது நிறுத்தி நாளாச்சி… ஏர்போர்ட்டா…பாக்கலாம்…போ இந்தா 50 பைசாக்கு பாக்கும் 50 பைசாக்கு வெள்ளை வெத்தலையும்.. நில்லு! தா வாரானே அவனுக்கு ரெண்டு ரூவா குடுத்து அனுப்பு!! சரி இந்தா அஞ்சு ரூவா கொடு! ரேசன் கடையில என்ன போடறாங்கன்னு பாத்திட்டு வந்துடு! என்னவாம்?! ரெண்டு பை ஓட்ட இல்லாம எடுத்துட்டு போய் வாங்கிட்டு வந்துடு! அவன் குடுத்த காபி பாக்கெட்டே இன்னும் நாலு இருக்கு வீட்டுல…தீப்பெட்டியும் வேண்டாம்..சில்லரை வேணுண்டு சொல்லி… நில்லு…நின்னு வாங்கிட்டு வா! நீ வந்து டீ போட சரியாயிருக்கும்…ஹலோ… கொஞ்சம் வெயிட் பண்ணு! நான் சீக்கிரம் வந்துடுவேன்…அதுக்குள்ள நீ புல் பிடிங்கிரு.. ஒண்ணு விடாம… நேரத்தல செய்யலன்னா உனக்கு தான் பளு அதிகமாகிரும்… கலாக்ஷெத்ராவில் ஒரு நாள் சென்று பார்த்தபோது…அங்குள்ள புல்வெளியும் ஐஐடி, அண்ணா பல்கலைக் கழக புல்வெளிகளும் ஒன்று போல் தான் இருக்கின்றன… சென்னைக்கு நான் சும்மா செய்த தண்டோராக்களில் — மற்ற எல்லா இடங்கள் காட்டிலும்…சர்தார் படேல் ரோடு, காந்தி மண்டபம், அடையார், பெசன்ட் நகர் — இந்த பெல்ட்-இல் ஒரு டிகிரி வெப்பம் குறைந்து தான் இருக்கும்… அளந்து பார்த்தால் அரை டிகிரியை விட குறைவான டெல்டா தான் இருக்கும்.. தண்டோராக்கு ஒரு டிகிரி சற்று மிகுதியாக இருந்தாலும், நன்றாக இருக்கும்… கிண்டி வனமும், நன்மங்கலம் வனமும்.. எப்போதும் மனதை நெருடச் செய்யும் இடங்கள்… என் மனம் சொல்வது — இதனுள் நாம் செல்லவே கூடாது… இதை விட்டொழிக்கவும் கூடாது…. காட்டில் சென்று வர பெரிய காடுகளும், நல்ல பயிலுதலும் தேவை… நல்ல உதாரணங்கள்… பொருந்திய சித்தரிப்புகள்… ஒரு உயரிய நோக்கம்… பழப்பூச்சி ஆராயிச்சிக்கு சித்தப் படுத்தியவர்கள் தான் இன்று கெத்தாக இருக்கிறார்கள்… இது யாருக்கும் தெரியாத விசயமாக இருந்தது தான்.. இப்போது யூடூபு வழியாக பழப்பூச்சி ஆராய்வாளர்கள் அங்குலம் விடாமல் அலச ஆரம்பித்து விட்டார்கள்… நன்றாக நோக்க… ஒரு கேண்மை உணர்வு தான் அது…இடுக்கண் களைவதாம் விசயத்திற்கும் நமக்கும் என்ன தொடர்பு என்று பார்த்தால்… பன்ருட்டி பழம் தான்…பழமும் இனிக்க…கொட்டையும் ருசிக்க!ஃ! ( ஒரு நல்ல சைடு டிஷ் கொண்டா! ரெண்டு தன்தூரி ரோட்டி சொல்லு.. தன்தூரி பரோட்டா எல்லாம் வேணாம்..யல.. அதுல நெய்-ருக்கும் லா..பெரவு? )
சேதல்-பிரிதல்? சொல்லணி நன்றாக உளதே! என்று விக்சனரியை புரட்டலாம்…சற்று தாமதித்து… விக்சனரிக்கு போவதற்குள்ளாக நாம் படித்துள்ள பதங்களில் அலசி பிரித்து சேர்த்து அனுமானம் செய்த பொருளை எங்கயாவது எழுதிவைத்து, அப்புறம் சொல்களஞ்சியத்தில் தேடிப் பார்த்தால்… உங்கள் அனுமான பொருளையும் ஏற்கப் பட்ட பொருளையும் அருகருகில் வைத்து மகிழ்ந்து நோக்கலாம்… இந்த மாதிரியான நுண்மையை நீங்கள் பொதுவாக தொழில் போன்ற தகைமையுடைய செயல்களால் அறிவீர்கள் தாம்! இந்த மாதிரியான நுண்ணிய செயலாற்றல் தொழில், விளையாட்டு வித்தை, வாணிபம், இசை, கூத்து, உணவு உருவாக்கல், பயிற்றுவித்தல், மக்கள் தொடர்பு சார்ந்த பணிகள் ( ஆடை, அலங்காரம், நலமருளுதல், கேளிக்கை ) இன்னும் பல வழக்குமுறைகளுள்ளும் பொதிந்து இருக்கின்றனவே!
முன்னெச்சரிக்கை முத்தண்ணாவைத் தேடினால் இப்ப ஆளே மாறிட்டாரு! காமெடி மட்டுமின்றி என்னென்னலாமோ! ஒரு வேளை இவர் தானோ அவர் என்று கிடைத்த முகவரிகளில் ஒன்றை உங்களுக்கு கொடுத்திருக்கிறேன்.. முற்றிலும் எதிர்பாராத வரவு! நல்லதே! முன்னோர் வழி வந்த முன்னெச்சரிக்கை பாணிகள் நமக்கு அரண் போன்ற வலிவைத் தருகின்றன தாம்! நாம் முன்னெச்சரிக்கையாக செய்வது நுண்செயல்களாக இருக்கின்றன… பழியிலிருந்து தப்பி இன்னொரு நாள் பிழைக்க வேண்டி சிறிது மெனக்கெடல் வேண்டும் என்கிறோம்… இப்படி செய்யப்பட்ட சேவைகளுக்கு நம் ரசனையை உரித்தாக்குகிறோம் நாம்! ஏதாவது ஒன்றோ இரண்டோ — விசயங்களுக்கு நுண்ஆராய்தல் போன்று பொருந்தி இருப்பதும் தொழில்வழமையில் சிறப்பது போன்றே இருக்கும்!
உள்ளும் வெளியும் வெள்ளிக்குள்
பொருந்த செய்வார் தங்கமே
பொறுத்த நுதலார்க்கு செப்பே
இளநீர் குடித்தோர்க்கு மெக்னீசியமே
நல்லவர்க்கெல்லாம் சாட்சி துத்தநாகமே!
யாரும் ரூட்ட மாற்றுவதுள் இதோ!
magnesium, zinc ( துத்தநாகம் ) இவையும் வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களே! அரிய குணங்கள் கொண்டவை!!