ஈசத்துவம்!

Rie
1 min readApr 13, 2019

--

நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாங்
கொண்டவை யோராண்டு கூடி யிருந்திடிற்
பண்டையவ் வீசன் தத்துவ மாகுமே. — (திருமந்திரம் — 684)

விளக்கம்:
சதாசிவத்தைத் தேடி உச்சிக்குச் செல்லும் நாயகியான குண்டலினி, நிலைத்து உச்சியிலேயே நிற்கும் போது, ஐம்பூதங்கள் இயங்கும் விதத்தைப் புரிந்து கொள்ளலாம். அதனால் ஏற்பட்ட தெளிவுடன் தொடர்ந்து ஓராண்டு தியானித்து வந்தால் மிகப் பழமையான ஈசனின் தத்துவம் புரிய வரும். அதுவே ஈசத்துவம் என்னும் சித்தியாகும்.

Originally published at திருமந்திரம்.

--

--