மூச்சைக் கட்ட வல்லவர்கள்

Rie
Nov 8, 2020

--

கட்டவல் லார்கள் கரந்தெங்குந் தாமாவர்
மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து
பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு
நட்டறி வார்க்கு நமனில்லை தானே — 711

விளக்கம்:
பிராணாயாமம் செய்து மூச்சைக் கட்ட வல்லவர்கள், மறைந்திருக்கும் அருள்வெளியைக் கண்டடைந்து அங்கே மனம் லயித்திருப்பார்கள். தாமரைப்பூவிலிருந்து அதன் மணத்தை பிரிக்க முடியாது, அது போல் தியானத்திலே நமது மனம் திரிவுபடாமல் சுழுமுனையில் நிலைத்திருக்க வேண்டும். அப்படி மனம் நிலைத்து நின்று தியானம் செய்தால் குண்டலினியாகிய சக்தி புருவ மத்தியில் குத்தி மேல் ஏறுவதையும், உச்சந்தலையில் பொறி கிளம்புவதையும் உணரலாம். இவ்வாறான அனுபவங்களைப் பெற்றவர்களுக்கு மரணம் பற்றிய சிந்தனையோ பயமோ இருக்காது.

Originally published at திருமந்திரம்.

--

--