தானே படைத்திட வல்லவ னாயிடுந்
தானே யளித்திட வல்லவ னாயிடுந்
தானே சங்காரத் தலைவனு மாயிடுந்
தானே யிவனெனுந் தன்மைய னாமே. — (திருமந்திரம் — 686)
விளக்கம்:
அட்டமாசித்தியான ஈசத்துவத்தைப் பெறும் போது நமது வாழ்க்கை விதி வழி செல்லாது நாம் நினைத்தபடி அமையும். நாமே நமது வாழ்க்கையில் ஒரு காரியத்தைத் திட்டமிடலாம், வெற்றிகரமாக நடத்தலாம், நல்லபடியாக நிறைவு செய்யலாம். விதியின் குறுக்கீடு இருக்காது. அட்டாங்க யோகத்தில் நின்று அட்டமாசித்தியைப் பெறுபவர்களுக்கே இதெல்லாம் சாத்தியம்.
Originally published at திருமந்திரம்.