வினை தீர்க்கப் பிறந்திருக்கிறோம்!

இன்புறு காலத் திருவர்முன் பூறிய
 துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
 பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
 அன்புறு காலத் தமைத்தொழிந் தானே. — (திருமந்திரம் — 453)

விளக்கம்:
 ஓர் உயிர் கருவாக இந்த பூமியில் உருவாகக் காரணம், தன்னுடைய முன் வினைகளைத் தீர்ப்பதற்காகவே! துன்பம் மிகுந்த இந்தத் துயர வாழ்க்கையின் ஆயுளையும், வாழ்க்கை முறையையும் நம் சிவபெருமானே அமைத்துக் கொடுக்கிறான். ஒரு தாய் தந்தையின் கூடலின் போதே பிறக்கப் போகும் உயிரின் விதி தீர்மானம் ஆகிவிடுகிறது.


Originally published at Scribblers.