தாலிய கழட்டி வீசிட்டு போ.. 😮 Aadhirai-க்கு ஆறுதல் சொன்ன மக்கள் 😍 | Ethirneechal Serial, Karikaalan
எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை சத்யா. இந்தத்தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாவதை அடுத்து நடிகை சத்யா அவர்கள் நமக்கு ஒரு நேர்காணல் ஒன்றை அளித்தார். சமுதாயத்தில் இன்னமும் கட்டாய திருமணங்கள் நடக்கிறது இதை பற்றி உங்களுடைய கருத்து என்ன ? என்ற கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு நடிகை சத்யா அவர்கள் “ கண்டிப்பாக கட்டாய திருமணங்கள் நடக்க கூடாது அதை நாம் தடுக்க வேண்டும் . அந்த காட்சியை நடிக்கும் போதே எனக்கு கஷ்டமாக இருந்தது அது உண்மையாலும் ஒரு பெண்ணுக்கு நடப்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை “ என்று கூறினார் . பிறகு கோவிலுக்கு வந்த மக்களிடம் தான் எதிர்நீச்சல் தொடரில் எப்படி நடிக்கிறேன் என்பதை பேட்டி எடுப்பதை போன்று கேட்டு தெரிந்து கொண்டார்.