Serial விட்டே போயிடலாம்னு நினைச்சேன் 😱: Ethirneechal Adhirai Exclusive Interview | Karikaalan
எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை சத்யா. இந்தத்தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாவதை அடுத்து நடிகை சத்யா அவர்கள் நமக்கு ஒரு நேர்காணல் ஒன்றை அளித்தார். இந்த எதிர்நீச்சல் தொடரில் நடிக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்ற கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு நடிகை சத்யா அவர்கள்” நான் தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி கொண்டிருந்தேன் . அப்போது எனக்கு தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் வாய்ப்புகள் வர தொடங்கியது அப்போது தான் எனக்கு இந்த எதிர்நீச்சல் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது” என்று கூறினார் . உங்கள் கதாபாத்திரத்திற்கு முதலில் எதிர்மறை கருத்துக்கள் வந்தது அதை எப்படி எதிர்கொண்டீர்கள் ? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் “நான் இந்த தொடரில் நடிப்பதை விட்டே போய் விடலாம் என்று நினைத்தேன் . பிறகு மக்கள் என்னை ஏற்று கொள்வார்கள் என்ற நம்பிக்கை வந்தது “ என்று பதில் கூறினார்.